தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதனால் பாடத்திட்டம் குறைப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
பாடத்திட்டம் குறைப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களின் கற்றல் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி கடந்த நவ.1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் – அமைச்சர் தகவல்!
அதனால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டு மிகக்குறுகிய நாட்களே ஆன நிலையில் பாடத்திட்டங்கள் பெரிதும் குறைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் பாடத்திட்டம் மீண்டும் குறைக்கப்படுமா என்ற குழப்பம் பள்ளி மாணவர்களிடையே நிலவி வருகிறது.
தமிழகத்தில் டிசம்பர் மாதம் 6 நாட்கள் விடுமுறை – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தாமை, பணியாளர்களின் நேர்த்தி மற்றும் மாணவிகளின் சுகாதாரம் காரணமாக கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் அரசு பள்ளி சமையல் கூடத்திற்கு ISO தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.