தமிழக போக்குவரத்து துறையில் 6,000+ காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து துறை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அரசுத் தேர்வுகள் நடத்துவது குறித்து அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைகளில் பஸ் ஊழியர்களுக்கான காலிப்பணியிடம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து துறையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பேருந்துகள் முழுமூச்சில் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழக போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறையால், பல வழி தடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
இவ்வாறு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது போக்குவரத்து கழக பணிமனைகளில் பணியாளர் பற்றாக்குறை உள்ளதால் சீரான இயக்கம் மற்றும் பராமரிப்பும் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதனால் பணிமனைகள் வாரியாக ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரண்டு மாதங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.