தமிழகத்தில் நாளை (பிப்.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கோவில்வெண்ணி, வடுவூர் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் ஒரு சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் அ. செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணி வழக்கமாக நடைபெறும். மேலும் துணை மின் நிலையங்களில், மின் கசிவு ஏற்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின்தடை ஏற்படும். இந்த மின்தடை அறிவிப்பு பற்றிய தகவல் முன்னதாகவே உதவி செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும்.
பிப்ரவரி 28 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்!
இந்த வகையில் கோவில்வெண்ணி, வடுவூரில் உள்ள துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்.3) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான கோவில்வெண்ணி, முன்னவால்கோட்டை, மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, செட்டிசத்திரம், சிக்கப்பட்டு, அம்மாப்பேட்டை, கருப்புமுதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவலியாநல்லூா், வடுவூா், மூவா்கோட்டை, எடமேலையூா், எடகீழையூா், சாத்தனூா், நெய்வாசல் கோவில்வெண்ணி, வடுவூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அ. செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.