பிப்ரவரி 28 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது. இருப்பினும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கொரோனா தொற்றின் கோவிட் -19 வகை மற்றும் ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்றானது ஒடிசா மாநிலத்தில் அதிக அளவில் பரவி வந்தமையால் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே நோய் தொற்று பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா தொற்று, மீண்டும் ஊரடங்கு அமல் – அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
ஒடிசா மாநில அரசு முன்னதாக விதித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நகர்ப்புறங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை மாநில அரசு தளர்த்தியுள்ளது. சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, நகர்ப்புறங்களில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் தினமும் காலை 5 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்.15 வரை வீட்டில் இருந்தே வேலை நீட்டிப்பு!
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கடைகள், மால்கள் மற்றும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், ஆடிட்டோரியங்கள், சட்டசபை அரங்குகள் மற்றும் இது போன்ற இடங்கள் தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு, மளிகை, காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் Zomato, Swiggy, OPOLFED, OMFED, சிலிகா ஃப்ரெஷ் போன்ற ஹோம் டெலிவரி களுக்கும் இரவுக் கட்டுப்பாடுகள் பொருந்தாது.