புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
புதுவையில் வரும் ஜூலை 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதாக கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது கல்வி நிலையங்கள் திறப்பு தொற்று அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்வி நிலையங்கள் திறப்பு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்து வருவதை ஒட்டி, புதுவை முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டு ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகளும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் 50 மாணவர்களுடன் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக புதுச்சேரி அரசு முன்னதாக அறிவித்தது. புதுச்சேரியை போல், தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களும் கல்வி நிலையங்களை திறக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விதிமுறைகளை பின்பற்றா விட்டால் மீண்டும் ஊரடங்கு – மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா பரவல் சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கல்வி நிலையங்கள் திறப்பது குறித்த அரசின் முடிவை அங்குள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் எதிர்த்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்தி வைக்குமாறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனால் மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் பேசுகையில், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தாலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.