10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மார்ச் 10 கடைசி நாள்!
அஞ்சல் மோட்டார் சேவைத் துறையின் கீழ் ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களின் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
நாட்டின் அஞ்சல் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறைகள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது அஞ்சல் மோட்டார் சேவைத் துறையின் கீழ் ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களுக்கு காலியிடங்களை அறிவித்து, அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 காலியிடங்கள் உள்ள நிலையில் , இந்த பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி அரசு பொது விடுமுறை – முதல்வரிடம் கோரிக்கை மனு!
மாவட்ட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் 11, ஈரோடு பிரிவு 02, நீலகிரி கோட்டம்: 01, சேலம் மேற்கு பிரிவு: 02 , திருப்பூர் பிரிவு: 01 ஆகும். இந்த பணிக்கு அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனத்திற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!
அஞ்சல் மோட்டார் சேவைத் துறையின் கீழ் ஸ்டாஃப் கார் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது, சாதி, தகுதி, அனுபவம், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, குட்ஸ் ஷெட் சாலைகள், கோயம்புத்தூர், 641001 என்ற முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மேலும் அதிக விவரங்களை அதிகாரப்பூர்வ இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.