Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறித்த முழு விபரம்!
இந்திய அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள், மக்களுக்கு உதவும் வகையில் எதிர்கால பண பலன்களை அளித்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சில சேமிப்பு திட்டங்கள் அதன் முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் கொரோனா பரவலால் மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. அதனால் மக்கள் தற்போது அதிக அளவில் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். வருங்கால வைப்பு நிதி திட்டங்கள், மாதாந்திர வருமான திட்டங்கள், கிராம சுரக்ஷா யோஜனா, செல்வ மகள் சேமிப்பு போன்ற திட்டங்கள் உங்களின் எதிர்கால சேமிப்புக்கு உத்திரவாதத்தை அளிக்கிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
TNPSC குரூப் 4 & VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவரின் புதிய தகவல்!
இதில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் எதிர்காலத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் உள்ளது. இத்திட்டத்தில் 7.6% வட்டியை அளிக்கிறது. இதில் முதலீடு செய்யும் தொகை 9.47 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறிவிடும். அடுத்ததாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் இதில் வட்டி விகிதம் 7.4% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், உங்களது பணம் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.1 ஆகும். இந்த திட்டத்தில் உங்களது பணம் 10.14 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.
Exams Daily Mobile App Download
மேலும் மாத வருமானத் திட்டம் இதில் வட்டி விகிதம் 6.8% ஆகும். இது 5 ஆண்டு முதிர்ச்சி திட்டமாகும். இதில் முதலீடு செய்தால் உங்க பணம் 10.59 ஆண்டில் இரட்டிப்பாகும். டைம் டெபாசிட் திட்டம் 1 முதல் 3 வருட கால டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5.5% வட்டி கிடைக்கும். இதில், உங்கள் பணம் இரட்டிப்பு ஆக 13 ஆண்டுகள் ஆகலாம். அதே சமயம், 5 ஆண்டு திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே, அதில், முதலீடு பணம் 11.5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.