Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.12000 முதலீடு, ரூ.1.03 கோடி வரை ரிட்டன்ஸ்!
நடுத்தர மக்கள் முதல் பொருளாதாரத்தில் செழிப்பாக உள்ளவர்கள் வரை அனைவரும் பயனடையும் விதமாக அஞ்சலகத்தில் பல திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் எளிய முறையில் அதிக லாபம் அடையும் வகையிலான திட்டங்களை குறித்து இந்த பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு போன்று அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், கணக்கில் இ ருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ATM போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – நவ.9 ரிசல்ட்!
இந்த அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டம் 7.1 சதவீத வருடாந்திர கூட்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டமானது 15 வருட முதிர்ச்சியைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்சம் சேமிக்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்வதற்கு பதிலாக ரூ.12500 மாதாந்திர டெபாசிட் செய்யலாம். மேலும், வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ், உங்கள் PPF கணக்கில் வரி விலக்கு மூலம் நீங்கள் பயனடையலாம். இந்த கணக்கில் ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வு வருமான மத்திய அரசு வருமான வரியை நீக்கியுள்ளது.
TNPSC குரூப் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!
சேமிப்பு திட்டத்தில் ரூ.22.5 லட்சம் முதலீடு செய்தால், வட்டியாக ரூ.18 லட்சம் பெறுவீர்கள். திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதில், மாதந்திர முதலீடு ரூ 12,500, 1 ஆண்டு முதலீடு ரூ 1.50 லட்சம் ஆகும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும். முதிர்வு தொகை ரூ 40.70 லட்சம், அதில் வட்டி பலன் ரூ 18.20 லட்சம் ஆக வழங்கப்படும்.