தமிழகத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – நவ.9 ரிசல்ட்!
தமிழகத்தில் 11 ம் வகுப்புகான தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனை தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகளை காண அறிவுறுத்தப்படுகிறார்கள்.
துணைத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 10, 11 , 12 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மதிப்பிட்டு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு துணைத்தேர்வுகளும் நடத்தப்படும். இந்தாண்டு கொரோனாவால் கால தாமதமாக நடைபெற்றது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது இதன் விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.
TNPSC குரூப் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!
இதையடுத்து வரும் 9ம் தேதி காலை 11 மணிக்கு 11 ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு – கல்வித்துறை அதிகாரிகள்!
செப்டம்பர் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நவம்பர் 11, 12ல் நேரில் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் கேட்கும் தேர்வர்கள், தங்களின் விடைத்தாள் நகலை, அரசு அறிவிக்கும் நாளில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.