Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது. தற்போது பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் ஒரு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குறைந்த முதலீட்டின் மூலமாக அதிக வட்டியை பெற முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி
தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. தற்போது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடுகளை செலுத்தத் தொடங்கின. இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலமாக அதிக வட்டிகளை பெற முடியும். அதனால் பெரும்பாலான மக்கள் இதில் முதலீடுகளை செலுத்தத் தொடங்கின.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு? வைரலாகும் மீம்ஸ்!
தற்போது பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் ஒரு சேமிப்பு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக பாதுகாப்பான முதலீட்டையும் , நல்ல வருமானத்தையும் பெற முடியும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் 417 ரூபாய் தினமும் முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் மேல் பெற முடியும். ஒவ்வொரு நாளும் 417 ரூபாய் என்றால் ஒவ்வொரு மாதமும் ரூ.12500 செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி ஆண்டுதோறும் ரூ.1.5 முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டு ஆகும். இவ்வாறு 15 ஆண்டுகள் முடிந்த பிறகு இத்திட்டத்தின் மூலம் 40.68 லட்சம் ரூபாய் என்ற மிகப்பெரிய தொகை வருமானமாக பெற முடியும். இத்திட்டம் மூலமாக 7.1% வட்டி கிடைக்கிறது
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!
அத்துடன் 15 ஆண்டுக்கு பதிலாக 25 ஆண்டு காலம் முதலீடு செய்தால் 1.03 கோடி ரூபாய் வரை பெற முடியும். இத்திட்டத்தில் இணைவதற்கு கணக்கை தொடங்குபவரின் அடையாள சான்று, முகவரி சான்று, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பதிவு படிவம் E போன்ற ஆவணங்கள் தேவைப்படும். அத்துடன் இத்திட்டத்தை சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றவர்கள் தொடங்கலாம். மேலும் இத்திட்டத்தில் ஜாயின்ட் அக்கவுண்ட் என்ற வசதி கிடையாது. அத்துடன் இத்திட்டத்தில் தனி நபர் மட்டுமே கணக்கை தொடங்க முடியும்.