தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர்பணியிடங்களுக்கு இன சுழற்சி ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
காலிப்பணியிடம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு பணிகள் முடங்கியது. இதனால் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எவ்வித தேர்வுகளும் நடைபெறவில்லை. அதனால் அரசு துறையில் புதிய பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாததால் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலி அறிமுகம்!
.இதனால் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது. மேலும் பணிகள் அனைத்தும் தாமதமாகிறது இதனால் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். அதனால் விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் 12 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் நிரப்பபடவுள்ளனர். இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!
அதில் இப்பணியிடத்திற்கு கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2021ல் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம் , கல்வித் தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு ஆகியவற்றின் நகல்களுடன் 25/-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட 25-10 செ.மீ அளவுள்ள உரை ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் 22.12.2021 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.