Post Office: 5 வகையான சேமிப்பு திட்டங்களின் முழு விவரம் – ரூ.100 முதல் டெபாசிட் செய்யலாம்!!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இதில் 5 வகையான சூப்பரான சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதால் உங்களுக்கு 100% பாதுகாப்பும் 2 மடங்கு லாபமும் கிடைக்கிறது. தற்போது பெரும்பாலானோர் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து தங்களின் பணத்தை சேமித்து வருகின்றனர். தற்போது அஞ்சல் அலுவலகளில் இருக்கும் சூப்பரான 5 சேமிப்பு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
Follow our Instagram for more Latest Updates
இதில் குறிப்பாக, தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு (National Savings Recurring Deposit Account) திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5.8 % வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த கணக்கில் குறைந்தபட்சமாக ரூ.100 டெபாசிட் செய்தால் போதும். இதனை தொடர்ந்து, தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் கீழ் ஆண்டுக்கு 4% வட்டி கிடைக்கிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். அடுத்ததாக, தேசிய சேமிப்பு மாத வருமான கணக்கு திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதமும் கிடைக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்க முடிவு – இமாச்சல பிரதேச அரசின் அறிவிப்பு!!
மேலும் இத்திட்டத்தில் தனிநபர் கணக்கின் கீழ் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக்கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும் டெபாசிட் செய்யலாம். இதையடுத்து தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificates) திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7% வட்டி விகிதமும் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து, தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கிலும் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.1000 டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.60 % முதல் 7.00 % வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.