பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்க முடிவு – இமாச்சல பிரதேச அரசின் அறிவிப்பு!!
தற்போது அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை என்பதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி, தற்போது பல மாநிலங்களில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகிறது. இதனால் மாநில அரசுக்கு வருங்காலத்தில் நிதிச்சுமை ஏற்படக்கூடும் என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கடன்சுமையும் அதிகரித்து, அதற்கான வட்டி செலுத்த பணம் தட்டுப்பாடும் ஏற்படக்கூடும் என மத்திய வங்கி எச்சரிக்கிறது.
போடி – மதுரை இடையே சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச அரசு, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது. இதற்காக வழிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அறிவிக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை நிதித்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது.