Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் பெறலாம்! அஞ்சல் துறை அறிவிப்பு!

0
Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - வட்டி சான்றிதழ் பெறலாம்! அஞ்சல் துறை அறிவிப்பு!
Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - வட்டி சான்றிதழ் பெறலாம்! அஞ்சல் துறை அறிவிப்பு!
Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் பெறலாம்! அஞ்சல் துறை அறிவிப்பு!

அஞ்சல் துரையின் கீழ் தங்களது சேமிப்பு கணக்கினை தொடங்கியுள்ள அனைவருக்கும் நிதியாண்டு அடிப்படையில் வட்டி சான்றிதழ் வழங்க அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் இந்திய அஞ்சல் துறை புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அஞ்சல் துறை:

மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் துறையின் கீழ் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது மூத்த குடிமக்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, நடுத்தர மக்கள் பயன்பெற என 9 வகையான சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஞ்சல் சேமிப்பு, செல்வமகள் சேமிப்பு, மூத்த குடிமக்கள் சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, மாதாந்திர சேமிப்பு போன்ற 9 வகை சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்புத்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

இந்த திட்டங்களின் கீழ் மக்கள் தங்களது சேமிப்பை தொடங்கி வருகின்றனர். ஏனெனில் அஞ்சல் துறை சேமிப்பு பாதுகாப்பாகவும், ரிஸ்க் இல்லாத சேமிப்பு திட்டமாகவும் மக்களால் பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களுக்கும் வட்டி சேமிப்புதாரரின் அஞ்சல் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில் அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஒரு நிதியாண்டில் கிடைக்கும் சேமிப்பு கணக்கு வட்டி குறித்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

டிச.11ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – ஒமைக்ரான் அச்சறுத்தல் எதிரொலி!

இது குறித்து ஆராய்ந்த அஞ்சல் துறை தற்போது அவர்களது கோரிக்கையை ஏற்று வட்டி சான்றிதழ் வழங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் நிதியாண்டு அடிப்படையில் வட்டி சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புதிய வழிகாட்டுதல்களை அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் இந்திய அஞ்சல் துறை வழங்கியுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் வட்டி சான்றிதழ் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!