தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்புத்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக அரசு துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ரூ.50,000 வரை வைப்புத் தொகையாக பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது நோய் பரவல் சற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு துறை வாரியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார். ஏற்கனவே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது
டிச.11ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – ஒமைக்ரான் அச்சறுத்தல் எதிரொலி!
மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கும் குடும்பங்களுக்கு அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூபாய் 50,000 வழங்கப்படும். அதே போல் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அந்த பெண் குழந்தைகளின் பெயரில் தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை பெண் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க அந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72,000க்கு குறைவாகவே இருக்க வேண்டும். மேலும் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவடைவதற்குள் விண்ணப்பித்து விட வேண்டும். அத்துடன் ஆண்டு வருமான சான்று, ஆண் வாரிசு இல்லை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தூத்துக்குடியில் டிச.3 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கிடைக்கும். இந்த விண்ணப்பங்களை சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் அசல் வைப்பு நிதிப் பத்திரம், பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியல் மற்றும் பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையானது அந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிவடைந்த பிறகு முதிர்வு தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும்.