தமிழகத்தில் மாதிரி வீட்டு வாடகை சட்டம் அமல்? முழு விபரம் இதோ!
மத்திய அரசால் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரி வாடகை வீட்டு வசதி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
மாதிரி வாடகை வீட்டு வசதி சட்டம்:
பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வாடகை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய ஒப்புதல் வழங்கியது. அதாவது வாடகை மற்றும் குத்தகை முறையில் பல திட்டங்களை கொண்டு வரவும், மேலும் தற்போது உள்ள வாடகை திட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வரவும் மாதிரி வாடகை சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும் வீடுகளில் வசூலிக்கப்படும் வாடகை முறையை நெறிப்படுத்த இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு – வங்கியாளா்கள் குழுமம் அறிவிப்பு!!
ஆனால் ஏற்கனவே நாட்டில் வீடுகள் வாடைகைகள் குறித்த சிலவற்றை முறைப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்தனர். அந்த வகையில் தான் நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் 2017 தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்கு 32 மாவட்டங்களிலும் 32 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இப்பொழுது அமல்படுத்தியுள்ள மாதிரி வாடகை வசதி திட்டத்தை கொண்டு வருவது அவசியமா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது பற்றி வீட்டு வசதித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது, ஏற்கனவே தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள சட்டம் புதியதாக இருப்பதால் இந்த மாதிரி சட்டத்தை அமல்படுத்த அவசியம் இல்லை என்று தான் தெரிகிறது.
ஜூன் 14 வரை காலை 9 மணிமுதல் கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
தமிழக அரசு தான் கூடுதல் பிரிவுகளை சேர்ப்பது பற்றி முடிவு எடுக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு இந்த வீட்டு வாடகைக்கு வணிகமாக்குவது ஒத்து வருமா? என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. இதனால் வாடகைதாரர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.