தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு – வங்கியாளா்கள் குழுமம் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவானது தற்போது ஜூன் 14ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து வங்கிகள் செயல்படும் நேரம் தொடர்பாக வங்கியாளா்கள் குழுமம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வங்கிகள் செயல்பாடு:
தமிழகத்தில் கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி வங்கிகளும் குறைந்த அளவு பணியாளர்களுடன் தொடர்ந்து இயங்க உத்தரவிடப்பட்டது. குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி வங்கிகள் செயல்படும் நேரம் வருகிற ஜூன் 13ம் தேதி வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வங்கி கிளைகள் செயல்படும். ஏற்கனவே உள்ளது படி வங்கிகளில் பிற்பகல் 2 மணிவரை பணபரிவர்த்தவனை நடைபெறும். மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கிளைகளில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டு உள்ளது. மாலை 5 மணிவரை நிர்வாக மற்றும் மண்டல அலுவலகங்கள் செயல்படும்.
ஜூன் 7 முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
வங்கிகளில் NEFT., RTGS வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வா்த்தகம், காசோலை மற்றும் ரொக்கப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் மட்டுமே வழங்கப்படும். ATM மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் போன்றவை முறையாக செயல்படுவதை வங்கி கிளைகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.