தமிழக கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை – அறநிலையத்துறை நாளை ஆலோசனை!
தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய மத வழிபாட்டு தலங்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை (ஜூன் 12) சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கோவில் வழிபாடு:
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சுவாமிக்கு செய்யப்படும் அர்ச்சனையானது சமஸ்கிருத மொழியில் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கும் இஎஸ்ஐ வசதி – மத்திய அரசு உத்தரவு!!
அதன் படி, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நாளை (ஜூன் 12) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், திருக்கோவில்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கவும், கோவில்களுக்கான அறங்காவலர் நியமனம் குறித்தும் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர், அந்தந்த கோவில்களின் விவரங்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர கோவில்களில் யானைகளின் பாராமரிப்பு, மற்றும் ஓதுவார் பணியிடங்கள் விபரம், கோவில்களின் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.