தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கும் இஎஸ்ஐ வசதி – மத்திய அரசு உத்தரவு!!
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி அளிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு:
மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ எனப்படும் மருத்துவ வசதியினை அளிக்கிறது. இந்த வசதியின் மூலம் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவ தேவைகளை கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மத்திய அரசு தொழிலாளர் நல அமைப்புகளுக்கு பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. பொதுவாக நிரந்தர பணியாளர்களுக்கு மட்டுமே இஎஸ்ஐ வசதி வழங்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மூன்று சலுகைகள் – அமைச்சர் விளக்கம்!!
தற்போது நாடு முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிரந்தர பணியில் இல்லாததால் சமூக பாதுகாப்பு திட்ட வரம்புக்குள் அவர்கள் வராமலே இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை சரி செய்ய அவர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு வசதி அளிக்கப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு ஆணைகளை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் வெளியிட வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.