தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – பொங்கல் பரிசு கோரிக்கை!
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஒப்புதல் அளித்து அதற்கான எஸ்.எம்.எஸ் பெற்ற பயனாளிகளுக்கு கார்டு வழங்கப்படாததால் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. மேலும் கொரோனா நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனால் கடந்த 2022 மே மாதம் முதல் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகள் வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுகளை அச்சிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மீனாவின் காதல் தூது – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தபட்டது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவுடன் அவை அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட எஸ்எம்எஸ் வரும். இந்த நிலையில் பலருக்கு எஸ்.எம்.எஸ் வந்தும் கார்டு வழங்கப்படாததால் அவர்கள் தற்போது அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாத நிலையில் உள்ளனர். மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்ததும் ரேஷன் கார்டு கேட்டு, உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு சென்ற போதும் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக கார்டு அச்சிடப்படவில்லை என்று கூறியதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்!
மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மொபைலுக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ் காட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் தற்போது ரேஷன் கடைகளில் எஸ்.எம்.எஸ் காட்டினால், பரிசு தொகுப்பு வழங்கப்படுவதில்லை. அதனால் ரேஷன் கார்டு விண்ணப்பித்து அதற்கான ஒப்புதல் அளித்தவர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.