தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் தமிழக மக்கள் அனைவரும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற தகுதியுடையவர்கள் கண்டறியப்பட்டு பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!

அந்த வகையில் 48,84,726 பேர் நகைக்கடன் பெற தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 35,37,93 பேர் நகைக்கடன் பெற தகுதியில்லாதவர்களாக கருதி நீக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் நகைக்கடன் பெற தகுதியை கருத சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 13,47,033 பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்களாக கருதி பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!

அரசின் இத்தகைய அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நகைக்கடன் தள்ளுபடி நிபந்தனைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது அனைவருக்கும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு தற்போது பல நிபந்தனைகள் விதித்து குறைந்த அளவிலான மக்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கியுள்ளது வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கூறுகையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!