தமிழக பொங்கல் பரிசு தொகுப்பில் புதிய அறிவிப்பு – தமிழக அரசு உத்தரவு!!
தமிழகத்தில் விரல் ரேகை பதிவு செய்த பின்னரே ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரேஷன்கார்டுதாரர்கள் ஜனவரி 10ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும் ரேஷன் கடைகளின் வாயிலாக பரிசுத்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதற்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருப்பு விலை அதிரடி குறைவு – பொதுமக்கள் ஹாப்பி!!
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ் எந்திரம் மூலமாக விரல் ரேகையை பதிவு செய்த பின்னரே பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல் ரேகை சரியாக பதியவில்லை என்றால் அந்த ரேஷன் கார்டுதாரர்களின் கையப்பத்தை பெற்ற பிறகு பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்ய வேண்டும் என ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.