தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலைகள் – பணிகள் தீவிரம்!
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அத்துடன் இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இலவச வேட்டி, சேலைகள்
தமிழகத்தில் அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் அனுப்பி வைக்கப்பட்டு அதனை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் பணி வருகிற ஜனவரி 3ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அத்துடன் தற்போது இலவசமாக வேஷ்டி மற்றும் சேலைகளை வழங்குவதற்கான பணிகள் தொடங்க உள்ளனர்.
ஜனவரி 15 வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் குஷி!
இந்த இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்படுகிறது. அதன் பின் வேஷ்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யப்படும். அடுத்ததாக கைத்தறி துணி நூல் துறை சார்பில் விசைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தனது மாவட்டத்திற்கான இலவச வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி இங்குள்ள 9 தாலுகாவுக்கு 5 லட்சத்து 38 ஆயிரத்து 590 சேலைகளும், 5 லட்சத்து 38 ஆயிரத்து 744 வேஷ்டிகளும் சுமார் 5.35 லட்சம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஜன.2ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு – அரசு அறிவிப்பு!
இதையடுத்து கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான சேலைகளும் வேஷ்டிகளும் ஒவ்வொரு தாலுகாவிற்கு அனுப்பும் பணி தொடங்கியது. அதன்படி தாராபுரம் – 81,627, காங்கயம் – 71,885, திருப்பூர் வடக்கு – 69,724, உடுமலை – 66,064, திருப்பூர் தெற்கு – 61,518, அவிநாசி – 66, 212, பல்லடம் -58,547, மடத்துக்குளம் – 35,391, ஊத்துக்குளி – 27,776 போன்ற தாலுகாவுக்கு 5 லட்சத்து 38 ஆயிரத்து 591 ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, இதுவரை 2.38 லட்சம் வேட்டி, சேலைகள் வந்தடைந்துள்ளது. மீதியுள்ள வேட்டி, சேலைகள் வந்தடைந்த பிறகு அரசு அறிவிப்பை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்