தமிழகத்தில் இன்று முதல் ஜன.2ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தீவிரமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக புத்தாண்டு பண்டிகையில் புனித நீராட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புனித நீராட தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடும் விதமாக அதாவது புதிய வருடத்தை வரவேற்கும் வகையில் கடலில் புனித நீராடுவது வழக்கமான ஒன்று ஆகும். இந்த நிகழ்விற்கு இந்த ஆண்டு தடை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உருமாறிய கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
இந்த தொற்று தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – பொங்கல் போனஸ் அறிவிப்பு!
இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் ஓமைக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிப்பது குறித்து முடிவுகள் எடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது நாளை புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு கடலில் புனித நீராட பொதுமக்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் ஜன.2ம் தேதி வரை திருச்செந்தூர், குற்றாலம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல்களில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.