தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு 2022 – அரசு விளக்கம்!
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பெயர் குறிப்பிட்ட பொங்கல் பரிசு பையில் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற வாசகம் இடம் பெற்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்த தமிழக அரசு இது போன்ற வடிவமைப்பு ஏதும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரண தொகை போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101.50 அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!
அடுத்த நலத்திட்டமாக 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கரும்பு, ஆவின் நெய் உள்ளிட்ட 19 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். வருடம் தோறும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புடன் பரிசுத்தொகையும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பரிசுத்தொகை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பையின் வடிவமைப்பு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டிச.3 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதில் ஒரு புறத்தில் உதித்து எழும் சூரியன் மற்றும் பொங்கல் பானை, கரும்பு ஆகியவற்றுடன் இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் – மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் மறுபக்கத்தில் வேளாண் குடும்பம் பொங்கலிட்டு மகிழ்வது போலவும் படம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து விளக்கமளித்த நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் சமூக ஊடகங்களில் வெளியான பொங்கல் பரிசு பை குறித்து கருத்து ஏதும் கூற முடியாது. பொங்கல் பொருட்கள் வைப்பதற்கான துணிப்பை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறினர்.