சென்னை: LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101.50 அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!
சென்னையில் வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் விலை ரூபாய் 101.50 உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட தற்போது அதிகரித்துள்ள சிலிண்டர் விலை உயர்வால் வியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
LPG விலை உயர்வு :
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலை மாற்றம் அடைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகளும், வியாபாரிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
ஓமைக்ரான் கொரோனா அச்சம் எதிரொலி – இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமல்!
தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிகரிக்கும் அத்தியாவசிய தேவையான சிலிண்டர் விலை பொது மக்களை பாதிக்கிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்குவதில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். டிசம்பர் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் டிச.3 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
ஆனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதன்படி வர்த்தக சிலிண்டர் விலை 101.50 உயர்ந்து ரூபாய் 2,234.50 என விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் பாதிப்புகளில் மீண்டு வரும் இந்த நேரத்தில் அதிகரிக்கும் வர்த்தக சிலிண்டர் விலை வியாபாரிகளுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. இதனால் இனி உணவகங்களில் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.