தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய தகவல்!
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு:
தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இயற்கை விவசாயம் செழிக்க சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து ஆண்டுதோறும் மக்கள் வழிபடுவது வழக்கம். ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும். அதில் பொங்கலுக்கு தேவையான பொருள்கள், கரும்பு ஆகியவை வழங்கப்படும். இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
Jio பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இனி இல்லை!
அதன் படி இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இருப்போருக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மத்திய அரசின் குழு அறிவிப்பு!
இந்த குழுக்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொங்கல் பொருள்களும் சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் இருக்கும் எனவும் அதனுடன் ஒரு துணிப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.