Jio பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இனி இல்லை!

0
Jio பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு - மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இனி இல்லை!
Jio பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு - மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இனி இல்லை!
Jio பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இனி இல்லை!

ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சில நாட்களுக்கு முன்பு உயர்த்தி இருந்த நிலையில் இதனை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் ஜியோ நிறுத்தியுள்ளது.

மூன்று ப்ரீபெய்ட் திட்டம் நிறுத்தம்

Airtel மற்றும் Vodafone Idea ஆகிய நிறுவங்களின் ப்ரீபெய்ட் கட்டண உயர்வு வாடிக்கையாளர் மத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இயங்கி வரும் பல முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்து உள்ளது. இதனை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. மேலும் தற்போது பல நன்மைகளுடன் வரும் 3 ப்ரீபெய்ட் திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவைகளாவன ரூ.499, ரூ.666 மற்றும் ரூ.888 ஆகும்.

மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மத்திய அரசின் குழு அறிவிப்பு!

இந்த 3 மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டமான ரூ. 499 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் பயனருக்கு அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் சந்தா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டமான ரூ.666 விலையில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற பலன்களை வழங்குகிறது.

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்பிப்பு!

அத்துடன் 56 நாட்களுக்கு பிளான் வேலிடிட்டியை வழங்குகிறது. இத்திட்டத்தில் ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் அணுகல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டமான ரூ.888 விலையில் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜியோ மியூசிக், ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளின் சந்தாவும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இவ்வாறு பல நன்மைகளுடன் கிடைக்கும் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!