மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மத்திய அரசின் குழு அறிவிப்பு!
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் குறைந்து, அதிக மாசு நிறைந்து உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களை மூடுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் காற்றின் தரக் குழு நேற்று உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசுபாடு:
கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகில் இருந்து தேசிய தலைநகர் டெல்லியில் அதிக காற்று மாசு பாடு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஆரம்ப கட்டமாக மாணவர்களின் நலன் கருதி முதலில் ஒரு சில ஆட்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி நிர்வாக அரசு உத்தரவிட்டது. ஆனால் தொடர்ந்து அதிக மாசு நிலவி வருவதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. டெல்லியின் மாசு நிறைந்த காற்றானது ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளையும் சென்றடையும் என்பதால் அங்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்டது.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்பிப்பு!
நாளுக்கு நாள் காற்றின் தரம் குறைந்து வருவதால், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) மேலும் மோசமடைவதைத் தடுக்க, மத்திய அரசின் காற்றின் தரக் குழு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடவும், ஆன்லைன் முறையில் மட்டுமே கல்வி கற்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் என்சிஆர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும், தேர்வுகள் மற்றும் ஆய்வக நடைமுறையின் செயல்பாடுகள் மட்டுமே நேரடியாக நடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
SBI vs HDFC vs ICICI vs YES வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வைப்பு நிதி வட்டி விபரங்கள்!
மேலும், சமீபத்தில், டெல்லியில் காற்று மாசு அளவு அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் பள்ளி, பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், காற்றை மாசை குறைக்கும் வகையில், பெரியவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று அபாயத்தை தொடர்ந்து தற்போது காற்று மாசு காரணமாகவும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.