தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் செல்ல இருப்பவர்கள் அதற்கான முன்பதிவினை இன்று முதல் மேற்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி அரசும் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு வருடமும் ரொக்க பரிசும், சேலை, மளிகை பொருட்கள் மற்றும் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ரொக்க பரிசாக 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படியாக இருக்க, பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறப்பு? பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்ப்பு!
இதனால் தங்களது சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் விடுமுறை தினங்களை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட திட்டமிடுவர். அதற்கு பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் தான் செல்ல திட்டமிடுவர். மக்களின் நலன் கருதி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு முதற்கட்டமாக, ஜனவரி மாதம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் இன்று முதல் முன்பதிவினை மேற்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கலில் டிச.19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 5ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை!
அதன்படி, 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் முன்பதிவினை இன்று முதல் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்பதிவினை தமிழக போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in என்ற தளத்தில் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் திருப்பதி மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.