திண்டுக்கலில் டிச.19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 5ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை!
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரத்தில் வருகிற டிச.19-ஆம் தேதி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறயுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
கொரோனா நோய் பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகளை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். அதில் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அநேக இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒட்டன்சத்திரத்தில் வருகிற டிச.19 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி முதல் பள்ளிகள் முழுமையாக திறப்பு – கல்வித்துறை திட்டவட்டம்!
இந்த மாபெரும் முகாம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் அத்துடன் திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற உள்ளது. இந்த முகாம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். அத்துடன் டிப்ளமோ, ஐ.டி.ஐ., பொறியியல் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய தகவல் – தேர்வர்கள் கவனத்திற்கு!
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சுய விவரக் குறிப்பு ஆகியவற்றுடன் வருகை தர வேண்டும். இம்முகாமில் தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அத்துடன் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. அதனால் வேலையில்லா பட்டதாரிகள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற்று கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குநர் ச.பிரபாவதி கூறியுள்ளார்.