தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை – ஐகோர்ட் உத்தரவு!

0
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை - ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை - ஐகோர்ட் உத்தரவு!தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை - ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை – ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் கிராமங்களில் கோயில் திருவிழாக்களை நடத்த காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போது இதற்கு அவசியமில்லை என மதுரைக்கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.

கோவில் திருவிழா

விருதுநகர் மாவட்டத்தில் வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா ஆகஸ்ட் 19 முதல் 20 வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த திருவிழாவை நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை காவல்துறையினரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை.

ஆதலால் கோவில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விருதுநகர் மாவட்டத்தில் வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயிலில் திருவிழா நடத்த உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிராமத்தில் நடத்தப்படும் கோவில் திருவிழாக்களை நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்!

Exams Daily Mobile App Download

ஆனால் கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருந்தால் காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன் கோவில் திருவிழாக்களில் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்த ஒத்துழைப்பு தருவார்கள். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதாலும் இக்கோவிலில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!