மின்சார சட்டத்திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்!
நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த மசோதா ஏழை மக்களைப் பாதிக்கும் வகையில் அமைத்துள்ளது என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்சார சட்ட திருத்த மசோதா:
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த மசோதா ஏழை மக்களைப் பாதிக்கும் வகையில் அமைத்துள்ளது என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் பேசுகையில், மின்சார சட்டத்தில் எந்த இடத்திலும் இலவச மின்சாரம் பற்றிக் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார்.
65வது பிரிவில், மாநில அரசுகள் எந்த தரப்பு நுகர்வோருக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பேசிய அவர் புதிய சட்டத்திருத்தத்தில் அந்த பிரிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் விரும்பினால் மானிய விலை மின்சாரத்தையோ, இலவச மின்சாரத்தையோ தொடரலாம் என தெரிவித்துள்ளார்.
WhatApp செயலியில் வரவிருக்கும் Avatar Dp – முக்கிய அப்டேட் வெளியீடு!
Exams Daily Mobile App Download
மேலும் மின்சார சட்டத்திருத்த மசோதாவைப் பற்றி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள் மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். தமிழக அரசிற்கு 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் கட்டமைப்பைத் தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. மேலும் இந்த மசோதா மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம், குடிசையில் வசிப்போருக்கு வழங்கும் இலவச மின்சாரம் ஆகியவை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.