தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் இதுதான் நடக்கும்… எச்சரிக்கும் காவல் ஆணையர்!!
தமிழகத்தில் கஞ்சா,குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போதைப் பொருள்
தமிழகத்தில் கஞ்சா, மாவா,குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் அவ்வப்போது இத்தகைய தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அத்துடன் போதை பொருட்களை ஒழிப்பதற்கு புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக நேற்று ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி பள்ளி, கல்லூரி, மற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் காவல் ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் முடிவில் கஞ்சாவை விற்பனை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று குட்கா,மாவா விற்பனை செய்தது தொடர்பாக 95 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளி,கல்லூரி, மற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களிலும் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள்,பதுக்கி வைப்பவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.