சபரிமலை செல்லவிருக்கும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..புதிய வசதி அறிமுகம்!
கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி கோயில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு திருநடை நாளை திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை:
கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா பரவலின் காரணமாக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தற்போது நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படவுள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டு ஒரு சிறப்பு என்னவென்றால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.
Google Chat: இனி நோட்டிபிகேஷன் தொந்தரவு இல்லை.. ‘Do Not Disturb’ அம்சம் அறிமுகம்!!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் சபரி மலைக்கு வரும் பக்தர்கள் எளிதாக முன்பதிவு செய்ய virtual Q என்ற புதிய online booking வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து மலையேறலாம். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் ஸ்பாட் புக்கிங் செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்கான டிக்கெட் கவுண்டர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.