தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று கறிக்கடைகள் செயல்படுமா? காவல்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அசைவ ஓட்டல்களை மூடுமாறு போலீசார் முன்னதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
காவல்துறையின் அறிக்கை:
விநாயகர் சதுர்த்தி பெருவிழா தமிழகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். அரசு விடுமுறை நாளான அன்று பண்டிகைகளை மக்கள் சிறப்பிக்க ஏற்ற வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மக்கள் இந்த பண்டிகையினை பாதுகாப்பாக கொண்டாடும் விதமாக அரசு முன்னதாக பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை எவ்வாறு கரைக்க வேண்டும் என்பது போன்ற வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அரசின் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கர மடம் அருகே இறைச்சி விற்பனை செய்யும் உணவகங்களை இரண்டு நாட்களுக்கு மூடுமாறு தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல்துறையினர் சுற்றறிக்கை விடுத்திருந்தனர். செப்டம்பர் 2ம் தேதி முதல் விநாயகர் சிலை ஊர்வலம் சுமூகமாக நடைபெறவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 30) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
இதனால் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதற்கான சுற்றறிக்கையை இன்ஸ்பெக்டர் ஜே.விநாயகம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட்டார். மேலும், பிரியாணி கடைகள் மற்றும் இறைச்சி பரிமாறும் பிற உணவகங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் நகல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற ஒரு சுற்றறிக்கையை தான் வெளியிடவில்லை என்றும், இது தவறான தகவல்தொடர்பு வழக்கு என்றும், பிரச்சினை தீர்க்கப்பட்டு வருவதாகவும் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்