நாடு தழுவிய முழு ஊரடங்கு – பிரதமர் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்!!!

0
நாடு தழுவிய முழு ஊரடங்கு - பிரதமர் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்!!!
நாடு தழுவிய முழு ஊரடங்கு - பிரதமர் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்!!!
நாடு தழுவிய முழு ஊரடங்கு – பிரதமர் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்!!!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

முழு ஊரடங்கு:

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவி வருகிறது. முதல் அலையின் பாதிப்பை விட இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரண்டாம் அலையின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. தொற்றினால் இம்முறை உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு? முக ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை !!

இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கு ஒன்று தான் வழி என்று வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு போடப்பட்ட முழு ஊரடங்கினால் நாடு மற்றும் மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்தது. இதனால் இம்முறை நாடு தழுவிய முழு ஊரடங்கு அறிவிப்பதற்காக வாய்ப்புகள் இல்லை என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

மாநிலங்களில் உள்ள நிலைமைகளைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தொற்றின் தாக்கம் அதிக வீரியமடைந்து மக்களை தாக்குவதால், நிலையை கட்டுக்குள் வைக்க முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!