தமிழகத்தில் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு? முக ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை !!
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுடன் தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகள் பல ஆயிரங்களை தாண்டி பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 21,228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தவிர 144 பேர் பலியாகியுள்ளனர். தவிர சென்னை, கோவை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தினமும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுகிறது. மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு போதிய படுக்கை வசதி இல்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்களும், மாநில அரசும் வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுடன் தமிழக தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
மே 12க்கு மேல் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு !!
அதன் படி நேற்று (மே 4) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கொரோனா அதிகம் பாதித்த சில மாவட்டங்களுக்காவது முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது குறித்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க என்ன செய்வது என்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. அதனால் வரும் காலங்களில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றிற்கு ஊரடங்கு விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.