மே, ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

0
மே, ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - பிரதமர் மோடி அறிவிப்பு!!
மே, ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - பிரதமர் மோடி அறிவிப்பு!!
மே, ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளர்.

கொரோனா பாதிப்பு:

கொரோனா தொற்று பரவல் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மக்களை பாதிக்கத் தொடங்கியதால் நாட்டில் முழு ஊரடங்கு உத்தரவு நோய் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து விட்டது. முழு ஊரடங்கினால் அனைத்து வணிக நிறுவனங்களும் முடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வந்தனர். நாட்டின் பொருளாதரமும் சரிவடைந்தது.

AIIMS தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியீடு!!

மத்திய அரசு உதவி:

கடந்த முறை ஊரடங்கின் போது மத்திய அரசு சார்பில் பொதுமக்களுக்கு “பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு ரூ.500 நிதி உதவி வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இலவச உணவு தானியங்கள்:

இதனால் சாதாரண நிலையில் உள்ள பொதுமக்கள் பாதிப்படையும் சூழல் வரும் வாய்ப்பு உள்ளதால், மே மற்றும் ஜூன் மாதங்களில் 5 கிலோ உணவு தானியங்கள் 80 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக ரூ.26,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!