மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள்!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவுறுத்தல்கள்!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவுறுத்தல்கள்!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள்!

மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2000 வீதம் என ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இதில் தற்போது 11வது தவணைத் தொகையை விரைவில் வழங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து உங்களின் பெயர் இத்திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ளதா என்பதை எப்படி சரி பார்க்கலாம் என்று பார்ப்போம்.

பயனாளிகள் கவனத்திற்கு

இந்தியாவில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிஎம் கிசான் திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் தொடர்பான பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பல கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 11வது தவணை பெற விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அத்துடன் 11வது தவணை வழங்குவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31ம் தேதிக்குள் வழங்கப்படுவது வழக்கமாகும். அதே போல் 2வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30ம் தேதிக்குள் வழங்கப்படும். இதையடுத்து 3வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31ம் தேதிக்குள் வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரி பார்ப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில் https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் விவசாயிகள் கார்னர் என்ற டேபிள் உள்ள பயணிகள் பட்டியல் பெறுவதற்கான பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது இதில் தங்களின் மாவட்டம், பிளாக், கிராமம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து ‘Get Report’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. இப்போது திரையில் உங்கள் பகுதியில் உள்ள பயனாளிகளின் பட்டியல் காண்பிக்கப்படும், அதில் தங்களின் பெயர் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!