தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு கடன் சுமையில் உள்ளதால் அதனை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து போக்குவரத்து துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
பேருந்து கட்டணம் உயர்வு:
தமிழகத்தில் திமுகவினர் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். அதன் படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்திய முதல் 5 வாக்குறுதிகளில் ஒன்றாக இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம் கட்டணம் இன்றி பயணிகள் அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தையும் சந்தித்தது.
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – கார்டை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா? முழு விவரம்!
இதனை ஈடு செய்ய தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மாநிலத்தின் பொருளாதார நிலை இறங்கு முகத்தை சந்தித்தது. மருத்துவ கட்டமைப்பு தடுப்பூசி உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க அரசு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே கடன் சுமை அதிகரித்துள்ள நேரத்தில் பதவியேற்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ஏற்பட்ட பொருளாதார சரிவை சரி செய்ய அத்தியாவசிய தேவைகளின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அனைத்து பேருந்துகளிலும் கட்டணத்தை உயர்த்தவும் அதற்கான கட்டண உயர்வு அட்டவணை தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களுக்கு செல்லும் தமிழக பேருந்துகளில் அம்மாநில கட்டணம் வசூலிக்கப்படும். இதனை கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான தகவலை பரப்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.