உத்திர பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – கொரோனா பரவல் எதிரொலி!!
நாடு முழுவதும் கொரோனா பேரிடர் காலத்தில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி உத்திர பிரதேச மாநில அரசு தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவலின் முதல் அலை பரவி மக்களை பாதித்து வந்த நிலையில் இந்த ஆண்டில் இரண்டாம் அலையாக உருவெடுத்து மக்களை மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சில தினங்களுக்கு முன்பு மத்திய கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் 2020-21ம் ஆண்டிற்கான CBSE பாடத்திட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். தற்போது இதனை தொடர்ந்து பல மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (TET) வாழ்நாள் முழுவதும் செல்லும் – மத்திய கல்வி அமைச்சகம்!
அந்த வகையில் ஏற்கனவே அரியானா, கோவா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்படுவதாக துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா அவர்கள் அறிவித்தார்.