தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு? TNPSC யிடம் ஒப்படைக்க திட்டம்!!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு தற்போது வரை அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டு TNPSC யிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணிகளை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ( டிஆர்பி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் போன்றவை டி.ஆர்.பி. மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வு மூலம் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இதில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளை நீதிமன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் உதவி பேராசிரியர் தேர்வு, உடற்கல்வி ஆசிரியர் நியமனம் என பல நியமனங்கள் நடைபெறாமல் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, விசாரணையை தொடங்கியுள்ளது.
Maggi நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு இல்லை – தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்!!
ஆனால் உயர்கல்வித்துறைக்கு தனியாக தேர்வு நடத்தப்படலாம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை மொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வழியாக நியமனம் மேற்கொள்ளலாம் என்று முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முக்கிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.