இந்தியாவில் இன்றிரவு தெரியும் “பிங்க் மூன்” – ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணாம பாருங்க!
இன்று நள்ளிரவில் இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே பிங்க் மூன் தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மக்கள் பலரும் பிங்க் மூனை காண ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிங்க் மூன்:
நிலவுதான் பூமியின் ஒரே ஒரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். நிலவு பூமிக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் போது நிலவின் அளவு பெரியதாகவும் அதிக வெளிச்சத்தை கொடுப்பதாகவும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை சூரியன் மற்றும் நிலவின் வெளிச்சம் பூமியின் மீது விழாமல் இருக்கும். அதனை மக்கள் சூரிய கிரகணம் எனவும் சந்திரகிரகணம் எனவும் அழைப்பது வழக்கம்.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சொன்ன விளக்கம்!
அதேபோலத்தான் நிலவின் வெளிச்சம் சில நேரங்களில் குறைவாகவும் சில நேரங்களில் அதிகமாகவும், நிலவின் அளவு சில நேரங்களில் சிறியதாகவும் சில நேரங்களில் பெரியதாகவும் இருக்கும். பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு மிகவும் பெரியதாகவும் அதிக வெளிச்சத்தை கொடுப்பதாகவும் இருந்தால் அதனை ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் மூன் எனவும் பிங்க் மூன் எனவும் பெரிய நிலவு எனவும் அழைப்பது வழக்கம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் சம்பள உயர்வு அமல்!
அதாவது இன்று இந்தியாவில் சில இடங்களில் நள்ளிரவில் நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என நாசா விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். நிலவு பிங்க் கலரில் சில நிமிடங்கள் மட்டுமே காட்சியளிக்க இருப்பதால் மக்கள் பலரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு மத நம்பிக்கைகளின் படி சூப்பர் முன் பல விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதாவது மக்கள் பலரும் அந்த நேரத்தில் ஏதேனும் பிரார்த்தனை பரிகாரம் முதலியவற்றை செய்கின்றனர். இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே பிங்க் மூன் தெரிய உள்ளதால் மக்கள் பலரும் அதனை தவறாது பார்த்து விட வேண்டும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.