மாணவர் சேர்க்கைக்கு NET மதிப்பெண்கள் செல்லும் – UGC வெளியிட்ட முக்கிய தகவல்!
2024-25 ஆம் கல்வியாண்டில் இருந்து பிஎச்டி சேர்க்கைக்கு தேசிய தகுதி தேர்வின் மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு
பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட அறிவிப்பின்படி 2024- 25 கல்வியாண்டில் இருந்து பிஎச்டி சேர்க்கைக்கு தேசிய தகுதி தேர்வு (நெட்) மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் பல பல்கலைக்கழகங்கள் தனித்தனி பிஎச்டி நுழைவு தேர்வுகளை நடத்துகின்றன. இதன் காரணமாக மாணவர்கள் பல தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் இருக்கிறது.
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் – இன்று தொடக்கம்!
எனவே இந்த செயல்முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் பிஹெச்டி சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நெட் மதிப்பெண்களை எடுக்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இந்த முடிவானது தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நெட் தேர்வானது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.