இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் – இன்று தொடக்கம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி முடிவடைய உள்ளது.
வேட்பு மனு தாக்கல்:
இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் எண்ணும் பணி ஜூன் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தாக்கல் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
Follow our Instagram for more Latest Updates
அதேபோல் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா, அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 88 தொகுதிகளில் நடைபெறும் இந்த இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 4ம் தேதி முடிவடைய உள்ளது. வேட்பு மனு தாக்கல் மீதான பரிசீலனை 11 மாநிலங்களில் 5ம் தேதியும், ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 6ம் தேதியும் நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 8ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.