Ph.D., படிக்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இனி முதுநிலை பட்டம் தேவையில்லை! யுஜிசி அறிக்கை!
பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளை படிக்க இனிமேல் முதுநிலை பட்டம் தேவையில்லை 4 ஆண்டு கால இளநிலை படிப்புகள் முடித்த உடன் பி.எச்டி படிப்பில் சேரலாம் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
UGC:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 1986-ஆம் ஆண்டிலிருந்து 34 ஆண்டுகளாக இருந்த கல்விக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கையின்படி 2025-ம் ஆண்டுக்குள் உயர் கல்வியில் மொத்த சேர்க்க விகிதத்தை 50 சதவீதமாகவும் உயர்த்தி கல்வியை உலகமயமாக்குதல் போன்றவை புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். கற்றல் இடைநிற்றலில் உள்ள குழந்தைகளில் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது 2020 தேசிய கல்விக் கொள்கையின் இலக்காகும்.
Post Office இல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அமல்!
மேலும் 10 + 2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் இப்புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி எம்பில் படிப்பு நீக்கம் போன்ற பல புதிய அம்சங்கள் இந்த 2020 ஆண்டில் கல்வி கொள்கையில் இருந்தது. இதனை அடிப்படையாக வைத்து தற்போது பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளில் சேர இனி முதுகலைப் பட்டம் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக முதுநிலை பட்டப்படிப்பு இன்றி நேரடியாக பிஎச்டி படிப்பில் சேர 4 ஆண்டு கால இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், தொலைதூரக் கல்வி மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பயிலலாம். மேலும் புதிய படிப்பில் பெறுவோர் இடையில் நிறுத்திவிட்டு மீண்டும் எந்த உயர்க் கல்வி நிலையத்திலும் கூட படிப்பை தொடரலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.