மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.15,670 PF பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்!
ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியமாக ரூ.15,670 PF பெறுவது எப்படி என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
EPF அமைப்பின் கீழ் உள்ள பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12% ஒரு நிலையான தொகையை EPF-ல் செலுத்த வேண்டும். இதில், 8.33% பங்கு ஆதாயத்துக்கும் (EPS), 3.67% ஊழியரின் EPF கணக்கிற்கும் செலுத்தப்படுகிறது.மேலும், EPFO மத்திய அறங்காவலர் குழு அறிவித்ததன் படி 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF வட்டி விகிதம் 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் – நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!
தற்போது எப்படி, ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது என்பதை பார்க்கலாம். தற்போது ஒரு பணியாளரின் சம்பளம் அகவிலைப்படி உட்பட 1,00,000 எனில், EPFக்கான பங்களிப்பு 12% என்பதால் 12,000 இந்த தொகை நிலையான தொகையாக EPFக்கு செல்கிறது. மேலும், பங்களிப்பு 3.67% என்பதால் 3,670 EPF க்கும், இபிஎஸ் 40,000 இல் 8.33% ஆக 8,330ம் கிடைக்கிறது. மேலும், ஒவ்வொரு மாதத்திற்குமான வட்டி விகிதம் 8.15%/12 = 0.679% என்பதால் மொத்த பங்களிப்பு ரூ.15,670 ஆக இருக்கும். எனவே, EPF கணக்கில் முதலாளி மற்றும் பணியாளரின் மொத்த பங்களிப்பு 15,670 ஆக இருக்கும்.