டோக்கன் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் – அரசின் திடீர் அறிவிப்பு!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து எரிபொருளின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், பெட்ரோல், டீசல் போட விரும்புபவர்கள் முன் கூட்டியே பெட்ரோல் நிலையங்களில் டோக்கன் வாங்கி இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது
எரிபொருள் நெருக்கடி:
எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பெட்ரோல் டீசலின் விலை பல ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாமல் அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் பொருட்களிலிருந்து காய்கறிகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி உள்ளதால் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பெட்ரோல் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளின் சிரமத்தை போக்குவதற்காகவும், பெட்ரோல், டீசல் வாங்க விரும்புபவர்கள் முன் கூட்டியே டோக்கன் வாங்கிவிட வேண்டும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் முன்கூட்டியே தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து விட வேண்டும். பெட்ரோல், டீசல் தேவைப்படும் நேரத்தில் பொதுமக்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையத்திற்கு வந்து பெட்ரோல், டீசல் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையில் உள்ள முக்கிய அமைச்சர்கள் ரஷ்யாவிற்கு செல்ல உள்ளனர். மேலும், இந்த வாரம் இலங்கைக்கு பெட்ரோல், டீசல் வர வாய்ப்பே கிடையாது எனவும், எப்போது இலங்கைக்கு பெட்ரோல் டீசல் வரும் என்பது தெரியாது என இலங்கை நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பெட்ரோல், டீசல் வரும் வரைக்கும் பயணிகள் எரிபொருட்களின் உபயோகத்தை குறைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.