இந்தியாவில் வழக்கமான பணிகளை தொடங்க அனுமதி – கொரோனா பாதிப்புகள் சரிவு எதிரொலி!
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை கடைசி கட்டத்திற்கு வந்து விட்டது. அதனால் அனைத்து துறைகளிலும் வழக்கமான செயல்பாடுகளை துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாதிப்புகள் குறைவு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஊரடங்குகளையும் விதித்தது. அதன்படி பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது. இதுவரை மூன்று கொரோனா அலைகள் மக்களை தாக்கியுள்ளது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டாவை போல தற்போது ஓமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹருக்கு பதிலாக இடம்பெறும் வீரர் இவர் தான்? ரசிகர்கள் ஷாக்!
அதனால் மீண்டும் ஊரடங்கு அமலப்டுத்தப்பட்டது. 15 வயது முதல் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது மூன்றாம் அலை கடைசி கட்டத்திற்கு வந்து விட்டது என்று சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அதனால் பள்ளிகள், கல்லூரிகள், ஓய்வு விடுதிகள், பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் வழக்கமான செயல்பாடுகளையும் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மக்கள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் முழுமையாக பாதிப்புகளில் இருந்து வெளி வரவில்லை மே மாதத்தில் 4ம் அலை கொரோனா பரவும் என்று கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் பரபர தகவல் வெளியாகியுள்ளது அதனால் பொது வழக்கமான பணிகளுடன் அரசின் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களும் விரைந்து தடுப்பூசிகளையே செலுத்தி கொண்டு கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.